Ticker

6/recent/ticker-posts

உங்கள் ஜாதகத்தில் எதிர்மறையான செயல்களை காட்டும் 4 தோஷங்கள்

 சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும். அல்லது ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.

ஒருவருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால், அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இக்குறைகளை நீக்க ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு நபரின் ஜாதகத்தில் அசுப கிரகம் ஒரு சுப கிரகத்துடன் இணைந்தால், தோஷம் உருவாகிறது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜாதகரின் தோஷங்களைப் போக்க சில பரிகாரங்கள் செய்யலாம்.

பித்ரு தோஷம்:


ஒவ்வொரு வருடமும் பித்ரு பக்ஷத்தின் போது முன்னோர்களை  வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. பித்ரு தோஷத்தினால் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்கள் ஏற்படலாம். நிதி நிலைமை மோசமடைவதால், வீட்டில் பிரச்சனைகளும் அதிகரிக்கத் தொடங்கும். குழந்தையின்மையால பலவிதமான மன கஷ்டங்கள் ஏற்படும்.

பித்ரு தோஷ பரிகாரங்கள்


இந்த பித்ரா தோஷத்தைப் போக்க காக்கைகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் உணவளிக்க வேண்டும். மாதம் மாதம் வரும் அமாவாசை நாளில் வெள்ளைப் பசுவிற்கு பசும்புல்லை உண்ணக் கொடுக்கவும். பித்ரு தோஷ நிவாரண பூஜையை ஒரு ஜோதிடரிடம் முறையாக தெரிந்துக் கொண்டு, தோஷத்தைப் போக்கலாம். பொதுவாக காசிக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானது.

செவ்வாய் தோஷம்:


தம்பதியினரின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு, 2 பேரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு, உறவில் பாதகமான விளைவுகள் தோன்றத் தொடங்கும். ஒரு ஜாதகத்தில் செவ்வாய் முதல், நான்காம், ஏழாவது, எட்டாவது அல்லது பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் போது, ​​செவ்வாய் தோஷம் ஏற்படும். இதனால் திருமணம் தள்ளி போகும். வீட்டில் நிம்மதி இருக்காது.

செவ்வாய் தோஷ பரிகாரம்


செவ்வாய் கிரகத்திற்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு தீபம் ஏற்றவும். ஹனுமான் சாலிசாவைப் படித்தால் நல்லது. செவ்வாய் தோஷ பரிகார பூஜையை முறைப்படி செய்ய வேண்டும். இதனால் தோஷங்களின் தாக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளது.

கால சர்ப்ப தோஷம்:


காலனான ராகுவுக்கும், சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும். இது ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்று ஐதீகம்.

கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபடுவது எப்படி?


ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லாநாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரை நுாலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும். கால பைரவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும். அல்லது ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.

செவ்வாய்கிழமை பாம்புகளுக்கு பால் வார்ப்பது நல்லது.  துர்க்கை மற்றும் விநாயகப் பெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகும்.. செவ்வாய் கிழமைகளில் ராகு மற்றும் கேதுவிற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த பரிகாரங்கள் பொதுவான ஜாதக பரிகாரமாகும்.

நவகிரக தோஷமும் பரிகாரமும்


நவ கிரகங்களினால் தோஷங்கள் இருந்தால் பலருக்கும் காரிய தடைகள் ஏற்படும். தொழிலில் எதை தொட்டாலும் நஷ்டமாகவே இருக்கும். இந்த தோஷங்கள் நீங்க சில பரிகாரங்களை செய்யலாம். குல தெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும் காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

Post a Comment

0 Comments